Get it on Google Play
Download on the App Store

கண்கட்டி வித்தை

செய்வினை என்னும் ராகுவின் விளையாட்டு இன்றும் கிராமப்புறங்களில்,  ஏன் அறிவு குறைந்த நபர்கள் வாழும் நகர்ப்புறங்களிலும் கூட இன்னும் செய்வினை என்ற ஒரு செயல் நம்பப்பட்டு வருகிறது. எனக்கு யாரோ செய்வினை செஞ்சுட்டாங்க. அதனால் எனக்கு கஷ்டம் தொடர்ந்து வருகிறது. என்று பலர் சொல்வதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஜோதிடர்கள் இதை அதிகம் கேட்பார்கள் காரணம் அவர்கள் தான் ஜோதிடம் பார்க்க வருபவர்கள் பெரும்பாலும். அனைவருக்கும் ஒரு கண்ணோட்டம் இருக்கும். இந்த ஏழு ஆண்டுகால ஜோதிட அனுபவத்தில் செய்வினை பற்றி எனது கண்ணோட்டத்தை ஒரு கட்டுரையாக எழுதுகிறேன் விருப்பம் உள்ளவர்கள் தொடர்ந்து படியுங்கள்.
 
பொதுவாக எனக்கு செய்வினை செய்துவிட்டார்கள் என்று சொல்பவர்கள் பதட்டத்துடனே காணப்படுவார்கள். அவர்கள் கூறும் காரணங்களில் சில பின்வருவன:

1. செய்வினையால் பாதிக்கப் பட்டேன் என்று சொல்பவர்கள் தனக்கு இரவில் யாரேனும் அருகில் இருப்பது போன்று, என்னை யாரும் உற்று நோக்குவது போலவும், என்னை யாரோ ஒருவர் கண்காணிப்பது போன்றும் தோன்றும்.
2. நன்றாகப் போய்க்கொண்டிருந்த தொழில் திடீரென்று தோல்வி ஏற்படும்.
3. நல்ல நண்பர்கள் பகைவர்கள் ஆவார்கள். கணவன் - மனைவி இடையே நெருக்கம் குறையும். குடும்ப உறுப்பினர்கள்
மிகுந்த மன உளைச்சலைத் தருவார்கள்.
4. நன்றாக தூங்கிக் கொண்டிருப்பவர்கள் திடீரென்று விடியற்காலை எழுந்து இருப்பார்கள்.
5. மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாத உடல்நிலை கெட கூடிய சூழ்நிலை ஏற்படும் சரியான காரணம் இருக்காது. ஆனால், அடிக்கடி மருத்துவமனை செல்வார்கள்.
6. கெட்ட கனவுகள் மூலமாக கனவுகள் மூலம் பயமும் ஏற்படும் உறக்கம் குறையும்.
7. செய்வினை செய்யப்பட்டவர்கள் குடும்பத்தில் தொடர்ந்து மர்மமான முறையில் நெருங்கிய உறவினர்கள் என்று தொடர்ந்து இறந்து போவதாக கூறுவார்கள். (குறைந்த கால அளவில்) 
8. தொடர்ந்து யாரோ அழுது கொண்டிருப்பது போல எனக்கு சத்தம் கேட்கிறதே என்று கூறுவார்கள்.
9. இரவில் திடீரென்று ஒரு கருப்பு பூனை அந்த வீட்டை சுற்றி வருவது போன்று சில சூழ்நிலைகள் நடக்கும்.
10. பசு மாடு பாதிக்கப்பட்டவர் வீட்டில் அருகில் இருந்தால் அது மிரண்டு ஓடும் அல்லது பாதிக்கப்பட்டவர் கால்நடை வளர்த்தல் அதில் பசு மாடுகள் இழக்கக்கூடும்.
11. காக்கைக்கு உணவு வைத்தால் உண்ணாது.
12. நன்றாக வளர்ந்த செடிகள் வாடி போகும்.
13. பூஜை அறையில் விளக்கை எத்தனை முறை ஏற்றினாலும் அது அணைந்து போகும்.
14. இறந்துபோன முன்னோர்கள் அடிக்கடி அழுத முகத்துடன் கனவில் வருவார்கள்.
15. வாகனத்தில் போய்க் கொண்டிருக்கும் பொழுது நூலிழையில் மரணத்தை தழுவி இருந்திருப்பேன் என்ற பதட்டத்துடன் காணப்படுவார்கள்.
இது பொதுவான காரணங்கள் இதைப் பற்றி நான் ஆய்வு செய்ததில் எனக்கு கிடைத்தது.

ஆனால் உண்மையில் இது அனைத்தும் ஜனன கால மாந்தி இருக்கக் கூடிய நட்சத்திரத்தில் ராகுவோ , கேதுவோ அல்லது ஜனன கால பாதக அதிபதி மீது சாய கிரகம் ( ராகு / கேது ) கடக்கும் காலத்தில் இந்த செயல்கள் அனைத்தும் நடக்கும். குறிப்பாக ஜனன கால மாந்தி மீது ராகு செல்லும் போது அந்த ஒன்றரை ஆண்டு காலம் அந்த ராசி கட்டத்தை கடக்கும் வரையில் நான் மேலே சொன்ன 15 - ஆம் கால அளவுடன் நடந்து செல்லும். இது ராகு மாந்தி மீது செல்லக் கூடிய பலன்கள் ஆனால் இதை செய்வினை என்று சொல்லி, " பயந்தவர்கள் கண்ணிற்கு இருப்பதெல்லாம் பேய் " என்று சொல்வார்கள். அதைப் பயன்படுத்தி செய்வினை செய்யக் கூடிய மாந்திரீகவாதிகள் என்ற போர்வையில் இருப்பவர்கள். தன்னை நாடி வருபவர்களை அவர்களால் இயன்ற அளவு அவர்களிடம் எந்த அளவிற்கு கரக்க முடியுமோ கரந்து விடுகிறார்கள். இதன் விளைவு எத்தனை காலம் இருக்கும். இதிலிருந்து மீள்வது எப்படி இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பொதுவாக தான் எழுத முடியும்  ஒரு ஜாதகத்திற்கும் சில விஷயங்கள் மாறுபட்டிருக்கும் ஆனால் பொதுவாக எழுதும் போது அனைவருக்கும் பயன்படும் வகையில் எழுத வேண்டும். தொடர்ந்து படியுங்கள் நிச்சயமாக உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும். நீங்கள் 10 பேருக்கு இதே போல பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு உறுதுணையாக இருக்க முடியும். அது மிகப் பெரிய புண்ணியம்.

ஒருவருக்கு எந்த காலத்தில் செய்வினை அதிக தாக்கத்தை தரும்?

குரு திசை கேது புத்தியில் / கேது திசையில் குரு புத்தியில் பில்லி சூனியம் ஏவல்களால் அதிகம் பாதிக்கப்படுவோர் அதிக தாக்கம் இருக்கும். இலக்கணம் வர்க்கோத்தமம் அமைந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் (85 +) என்பது உறுதி. ஆனால், அதே இலக்கண பாவம் பலம் இழந்தால் அவர்களை எளிதில் ஆத்மாக்கள் நெருங்குவதற்கான தொடர்புகள் உண்டு. தேஜாவு (TEJAVU ) ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை சொல்வார்கள். நடக்கும் செயலை ஏற்கனவே கண்டது போல பார்த்தது போல ஒரு உணர்வு, ஞாபகம் ஏற்படும். அது போன்ற நிகழ்வுகள் இலக்கணம் வர்க்கோத்தமம் அடைந்தவர்களுக்கு அதிகமிருக்கும். அவர்களே அதிகமாக ஃபேன்டஸி என்கின்ற விசித்திரமான கதைகளை எழுதுவார்கள். வேற்று கிரக வாசிகள் வாழ்வது போன்ற சித்திரங்கள் எல்லாம் இவர்கள் அறிய முடியும். சிலருக்கு செய்வினை வைக்க வேண்டாம் அவர்களுக்கு செய்வினை வைத்தது போல தானாகவே பயம் இருக்கும். அவர்களுக்கு எட்டாம் பாவ அதிபதி , மூன்றாம் பாவத்தில் இருந்தால் எப்போதும் மனதுக்குள் ஒரு ரகசிய பயம் இருந்து கொண்டே இருக்கும். அதே போல ராகுவின் நட்சத்திரத்தில் ( திருவாதிரை சுவாதி சதயம் ) சூரியன் அல்லது சூரியனின் ஆட்சி வீட்டில் சிம்மத்தில் ராகு அமர்வது ஜாதகருக்கு இவர்களை துஷ்ட மாந்திரீகத்தால் கட்டுப்படுத்தக் கூடிய சக்தி ஏற்படும். லக்கனத்திற்கு பாதகாதிபதியாக சனி வந்தால்,  ஆறாம் பாவம் ஆக அமையும் நட்சத்திரத்தின் அதிபதியாக ராகு தொடர்பு கொண்டால், எதிரிகளால் சாதாரணமாக பயப்படுவார் என்பது ஜோதிட விதி. ஜாதகருக்கு குரு திசை கேது புத்தி / கேது திசை குரு புத்தி நடக்கும் காலத்தில் மாந்திரீக தொந்தரவுகள் ஏற்படுவதற்கான விளக்கம் குரு கால புருஷ தத்துவப்படி நாலாம் வீட்டில் உச்சம் அடைவதும், பன்னிரண்டாம் ஆதிபத்தியம் பெறுவதும் குருபகவான் அந்த குரு பகவான் 8 - ஆம் வீட்டில் இருந்தாலும் , எட்டாம் வீட்டை 5-7-9 பார்வைகளில் தொடர்பு கொண்டாலும் அங்கு கேது இருந்தாலோ அல்லது கேது பார்த்தாலும் ( 3-11 ) எளிதாக குரு திசை கேது புத்தி காலத்தில் அவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும். இது 100 இல் 7 பேருக்கு இருக்க வாய்ப்புகள் உண்டு. இப்படி இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு குருதசை முழுவதுமே சோதனையாக இருக்கும். செய்வினை செய்யும் நபர்கள் ஒரு ஜாதகரை எப்படி கட்டுப்படுத்துகிறார்கள். ஒருவருக்கு இடையூறு செய்ய ஒரு உருவ பொம்மையை செய்து அதை அந்த மனிதராக பாவித்து அந்த மனிதரின் பெயரைச் சூட்டி சில மந்திரங்களைக் கூறி உடல் உறுப்புகளில் , ஊசியால் குத்தினால் ஆவணப்படுத்தலாம். ஒரு மனிதனின் காலடி மண்ணை எடுத்து நெருப்பில் போடுவதால் அவனுக்கு கேடு விளைவிக்க முடியும். ஒருவரின் தலை முடியை எடுத்து மந்திரம் கூறி அவரை மந்திரவாதியின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முடியும். ஆனால், இன்றைய நடைமுறையில் இது அனைத்தும் சாத்தியமா என்றால் நிச்சயமாக இல்லை. உண்மையாக கட்டுப்பட வேண்டும் என்றால் அந்த மனிதன் ( சூனியம் செய்யும் நபரால் ) உடம்பில் ஆன்ம சக்தி அதிகமாக இருக்க வேண்டும். அதாவது அவர் திருமணம் பண்ணாத நபராக இருக்க வேண்டும். உடலில் உற்பத்தியாகும் விந்தணுவை கட்டுப்படுத்திய அதை சக்தி மூலம் எழுப்ப வேண்டும் தனது குண்டலினி சக்தியை தான் நினைத்த போது எழுப்ப வேண்டும் இன்றைய கலியுகத்தில் அனைவர் கையிலும் செல்போன் இருக்கும் காலத்தில் இது எதுவுமே சாத்தியம் இல்லாத ஒன்று. மேலும் அந்த மாந்திரீவாதி திருமணபந்தம் இல்லாதவராக இருக்க வேண்டும். சரி எப்படி வேறு ஒரு இடத்தில் இருக்கும் நபரை ஒருவரால் கட்டுப்படுத்த முடியும். ரிமோட் அக்செஸ் நாம் இங்கிருந்து கொண்டே தொலைபேசி மூலமாக வேறு ஒருவருக்கு பேசுகிறோம், பத்தடி தூரத்தில் இருந்து டிவியை விரும்பிய அலைவரிசைப்படி மாற்றுகிறோம். அதுபோல எங்கிருந்து வேண்டுமானாலும் மனம் என்னும் மூலப்பொருள் அது மென்பொருளாக அவர் மூலமாக பிறரை துன்புறுத்தும் முடியும். ஒருவர் எங்கு சென்றாலும் அவரைப் பின்தொடரும் நிழல் போல அவர் மேல் ஏவப்படும் செய்வினை பின்தொடரும். மந்திர ஒலியானது பஞ்ச பூதங்களிலும் பாயக் கூடியது மந்திர ஒலி காற்றில் கலந்து ஆகாயத்தில் பரவி குறிப்பிட்ட இலக்கத்தை தாக்கி செயல்படுகிறது பொதுவான காற்று வெளியில் தான் எல்லா உயிர்களின் மூச்சுக் காற்றும் கலக்கிறது காற்றே செய்திகளை கடத்தும் பிரதான ஊடகம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும் மந்திர சாஸ்திரங்கள் இதை செய்ய முடியும். வெகு தூரத்தில் இருக்கும் நபருக்கு அல்லது வெளிநாட்டில் இருக்கும் நபர்களுக்கு ஏவல் செய்ய முடியுமா?
•    அண்மைய கோசம், 
•    மனோமய கோசம்,
•    பிராணமய கோசம், 
•    விஞ்ஞானமய கோசம்,
•    ஆனந்தமய கோசம் எனும் ஐந்து உடல்கள் எல்லா மனிதர்களுக்கும் உண்டு.
மனோமய கோசத்தில் மூலமாகத்தான் ஒருவர் உடலில் ஏவல் செலுத்தப்படுகிறது. மந்திரம் செய்பவன் பாதிக்கப்பட்டவரின் மனதை மூலமே தொடர்பு கொள்ள முடியும் எனவே மனம் தான் ஒருவரின் மாற்றத்திற்கு காரணம். இதை ஹோமங்கள் மூலமாக செய்வினை தோஷத்தில் இருந்து வெளிவர முடியுமா அல்லது பாதிப்புகள் நீங்குவதற்கான வழிமுறைகள் உள்ளனவா? பரசுராம ஷேத்திரம் எனப்படும் கேரளம் என்பதே செய்வினைக்கு புகழ் பெற்றது குறிப்பாக சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலில் கீழ் கோவில் நடைபெறும் பூஜைகள் ஒன்றான குருதி பூஜையில் கலந்துகொண்டு இந்த பாதிப்புகள் தீர்வுதான் அங்குள்ளவர் நம்புகிறார்கள். ஆனால், அனைவரும் இதில் கலந்து கொள்வது என்பது சாத்தியமில்லை முதல் பகுதியில் சொன்ன சூழ்நிலைகள் அதில் கூறப்பட்ட 15 நிகழ்வுகள் உங்களுக்கு நேர்ந்தால் எனக்கு தெரிந்து அனைத்து ஊர்களிலும் காளி கோயில் இருக்கும், மாதம் ஒரு முறை அல்லது வாரம் ஒரு முறை அங்கு ஏதாவது ஒரு ஹோமங்கள் நடத்துவார்கள். தஞ்சை பகுதிகளில் '' பிரத்தியங்கரா '' கோவில் இருக்கும் அங்கு சிறப்பு அங்கு மாதம் மாதம் அமாவாசை அன்று வரமிளகாய் போகும் நடத்துவார்கள். அல்லது நரசிம்மர் கோவில் இருக்கும் ஊர்களில் மாதம் ஒருமுறையேனும் சுவாதி நட்சத்திரத்தில் ''சுதர்சன ஹோமம்'' நடத்துவார்கள். இதில் கலந்து கொண்டாலே அந்த யாக புகை பட்டாலே அந்த வெப்ப ஆனால் பட்டாலே நம் மீது செலுத்தப்பட்ட அந்த துஷ்ட சக்திகள் அந்த நொடியிலேயே நம்மை விட்டு விலகும். மாதம் ஒருமுறையாவது அனைத்து ஊர்களிலும் கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. அங்கு கும்பாபிஷேகம் இரண்டு நாட்களுக்கு முன்பாக யாகம் வளர்த்து அதில் கலந்துகொள்ளலாம் இல்லையென்றால் யாகத்திலிருந்து சக்தியூட்டப்பட்ட கலச நீர் கோபுரத்தில் பட்ட பிறகு அதை அங்கிருந்து தெளிப்பார்கள் அது நம் மீது பட்டாலும் நம் தோஷம் விலகும் ஏவல் சக்திகள் நம்மை விட்டு விலகும். தப ஸ்ரீ சிலர் குடும்பத்தை விட்டு துறவரம் உண்மையான துறவறம் பூண்ட மகான்கள் காலில் விழுவதும் அவர்கள் பார்வை நம் மீது பட்டாலும் துஷ்ட சக்திகள் விலகும். திருச்செந்தூர் கோவில் செல்பவர்களுக்கு தெரியும் அங்கு பண்டாரம் என்று ஓர் இனத்தவர் இருப்பார்கள் 25 பேர் இருப்பார்கள் சங்கு ஊதி உணவு கொள்வார்கள் அவர்கள் பார்வை பெற்றாலோ, ஆசீர்வாதம் பெற்றாலோ தோஷம் விலகும். குலதெய்வ கோவில் பராமரிப்பாளர், குலதெய்வ கோவில் ஐயர், குலதெய்வ கோவில் சுத்தம் செய்பவர் இவர்களுக்கு ஒரு வேளை உணவு கொடுத்தாலும் அவர்களுடைய ஆசிர்வாதம் கிடைத்தாலும் தோஷம் விலகும். சபரிமலைக்கு 18 ஆண்டுகள் சென்று வந்த குரு சுவாமி அவர்கள் விரதமிருந்து மூடி கட்டி கோவில் செல்வதற்கு முன்பு அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கலாம். திருப்பதி நடை பயணம் செல்பவர்கள், பழனி பாத யாத்திரை செல்பவர்கள்,  இப்படி விரதம் இருந்து கடவுளை வழிபடுபவர்களுக்கு பால் ஜூஸ் பழரசம் போன்றவற்றை கொடுத்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் நபர்களுக்கு அந்த செய்வினை அகப்படும் விட்டு விலகும். இல்லை வெளி நாட்டில் இருக்கிறோம் இது அனைத்தும் முடியாது என்றால், ஹோமியோபதி கடைகளில் நக்ஸ்வாமிகா( Naxwamica ) என்று ஒரு மருந்து கிடைக்கும் இது கேதுவின் உடைய விருட்சமான வெட்டிவேர் மூலமாக தயாரிக்கப்படும் ஒரு மருந்து. அதை பாதிப்புக்குள்ளானவர்கள் குளிக்கும் நீரில் தொடர்ந்து 15 நாட்கள் 5ml தண்ணீர் கலந்து அந்த தண்ணீரைக் குடிக்கலாம், அவர் வீட்டில் அவர் உறங்கும் அறையை தினமும் தண்ணீரில் கலந்து சுத்தம் செய்யலாம். வெண்கடுகு குங்கிலியம் பயன்படுத்தி சாம்பிராணி புகை வீட்டில் மாதம் ஒருமுறை போடலாம். இப்படி நம்மை நாமே தற்காத்துக் கொள்ள முடியும். இதன் விளைவுகள் , இதனுடைய பாதிப்புகள் , இதனுடைய பரிகாரங்கள், இதை செய்ய சொல்லி பணம் கொடுக்கும் ஏவிவிடும் நபர்களுக்கு ஏற்படக் கூடிய பக்க விளைவுகள் அதிகமாக இருக்கும்.

கண்கட்டி வித்தை

Tamil Editor
Chapters
கண்கட்டி வித்தை