Get it on Google Play
Download on the App Store

பெருஞ்சோறு

 


4. பெருஞ்சோறு

பாரதப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. இருதரப்பிலும் பல்லாயிரம் உயிர் துறக்கின்றனர். காயம் பட்ட பலர், தாகத்தால் துடிக்கின்றனர். மற்றும் பலர் போர்க்களத்தில் உணவில்லாமல் உலர்கின்றனர்.
இக்கொடுமை கண்டான் தமிழ் மன்னன் ஒருவன்.அவர் பெயர் உதியஞ்சேரலாதன். போர்வீரர் துயருறுவதைக் கண்டு, அவர்களுக்கு உதவி செய்யுமாறு அவன் அருள் உள்ளம் உந்தியது.
தாகம் என்றவர்க்குத் தண்ணீரும் பசித்தவர்க்கு உணவும் தொடர்ந்து வழங்க ஏற்பாடு செய்தான். இன்னர் இனியார் என்னாமல் இருதரப்பினர்க்கும் உதவி செய்தான்.
அவன் செய்த உதவியால், பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றான்.
முதற்சங்கத்துப் புலவராகிய முரஞ்சியூர் முடிநாகராயர் என்பார் அவனைப் பாராட்டிப் பாடினார்.

 

 “அலங்குளைப் புரவி ஐவரொடு சிணைஇ
நிலம் தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை 
ஈரைம் பதின்மரும் பொருது களத்துஒழியப் 
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்”

 

என்பதே அப்பாடல்.
இங்கே கண்ட செய்தி எக்காவியத்திலும் இடம் பெறாமல் தமிழ்நாட்டில் மட்டும் வழங்கி வந்துள்ளது. இதே செய்தியைச் சிலம்பும் பெரும்பாணாற்றுப்படையும் கலித்தொகையும் குறிப்பிடுகின்றன. 

 

ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்

புலவர் த. கோவேந்தன்
Chapters
பதிப்புரை ஐவரை மணந்தவள் ஐவரை மணந்தவள் கண்ணனின் மனத்தூய்மை கடமையா வாய்மையா பெருஞ்சோறு வீமன் எழுதிய சமையல் நூல் எச்சில் இலை எடுத்த இறைவன் கண்ணனும் குதிரையும் கண்ணன் உதவாதது ஏன்? தருமனின் ஆணவம் அர்ச்சுனன் அகந்தை எலும்பு சொன்ன இறைமந்திரம் துரோணரின் மகள் சகுனியின் சகோதரர்கள் பாஞ்சாலி ஏன் சிரித்தாள் கர்ணனின் இடக்கைத் தானம் காய்ந்த விறகு ஈந்த ஈரநெஞ்சன் உயர்ந்த வேள்வி துரோணரும் ஆடுகளும் சகாதேவனின் தருமநீதி கண்ணனின் உண்மை வடிவம் அர்ச்சுனன் அம்புக்கு அஞ்சிய தேவர்கள் மலை போல் குவிந்த மலர்கள் தந்தையின் தவம் பழத்தோலில் சுவை கண்ட பரந்தாமன் கண்ணனின் மானம் காத்த பாஞ்சாலியின் பட்டுச்சேலை குடிசையை எரித்த நெருப்பைக் கும்பிட்டு நின்ற பக்தர் கணிகைப் பெண்ணின் பக்தி புலையன் வீட்டில் புனிதம் கண்ட இறைவன் கண்ணனைத் தாக்கிய அம்பு கண்ணனைக் காட்டிக் கொடுத்த மணிகள் வித்தையால் அழிந்த சீமாலிகன் மலர்களால் பெண்களை மறைத்த கண்ணன் கண்ணன் ஆடிய கூத்துகள் தமிழ்ப்பெண் நப்பின்னை தேவகியின் ஏக்கம் பாமாவின் பக்தி வீமனும் விரதமும்