Get it on Google Play
Download on the App Store

கர்ணனின் இடக்கைத் தானம்

 


15. கர்ணனின் இடக்கைத் தானம்


இன்னும் எத்தனை பிறப்பெடுத்தாலும் இல்லை என்று வந்தவர்க்கு இல்லை என்னாமல் ஈயும் வரமே வேண்டும். முத்திப் பேறும் வேண்டா என்று கண்ணனிடம் தன் உயிர் பிரியும் நிலையில் வரம் கேட்டவன் கர்ணன்.
இத்தகைய மனபாவம் படைத்தவன் ஆகையாலேயே அவன் தலையெழு வள்ளல்களில் முதன்மை பெற்றான்.
ஒரு நாள் கர்ணன் எண்ணெய் நீராட்டுக்காகத் தங்கக் கிண்ணத்தில் எண்ணெய் எடுத்துத் தன் உடலில் தடவிக் கொண்டிருந்தான். 
அப்போது ஓர் இரவலன், ‘பிக்ஷாம்தேகி’ (பிச்சையிடுக) என்று வந்தான்.
தங்கக் கிண்ணம் இடது கைப் பக்கமாக இருந்தது. கர்ணன் அதனைத் தன் இடக் கையாலேயே எடுத்து, இரவலனுக்கு அளித்துவிட்டான். இரவலன் மகிழ்வுடன் சென்றான்.
அருகிலிருந்த நண்பர் ஒருவர், "கர்ணனை நோக்கி  அங்கபூபதியே! இடக் கையால் தானம் தரலாகாது என்று அறநூல் கூறுகின்றதே! தாங்கள் செய்தது அறநூலுக்கு மாறுபட்டதல்லவா? வலக்கையால் தானே தந்திருக்கவேண்டும்” என்றார்.
“நண்பரே! அந்த அற நூலை நான் நன்கு பயின்றவன் தான். ஆனால், மனித மனம் நிலையில்லாதது. நொடிக்கு நொடி மாறிக் கொண்டே இருப்பது. இடக்கையருகே உள்ள தங்கக் கிண்ணத்தை அற நூலின்படி வலக்கையால் எடுக்கச் சில நொடிகள் தாமதமாகலாமே! அந்தச் சில நொடிளுக்குள், மனம் மாறிவிடலாமே! இவ்வளவு விலை உயர்ந்த கிண்ணத்தைத் தானமாகத் தரலாமா? என்று மனம் பகுத்தறிவைப் பேசத் தொடங்கிவிட்டால், என்ன ஆவது? என் கொடை தடுமாறிப் போகலாமே! அதனால் தான் இடக்கையால் அளித்தேன்” என்றான் கர்ணன்.
கர்ணனுக்குக் கொடையில் இருந்த ஆர்வம் கண்ட நண்பர் வியப்பில் மூழ்கினார். 

 

ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்

புலவர் த. கோவேந்தன்
Chapters
பதிப்புரை ஐவரை மணந்தவள் ஐவரை மணந்தவள் கண்ணனின் மனத்தூய்மை கடமையா வாய்மையா பெருஞ்சோறு வீமன் எழுதிய சமையல் நூல் எச்சில் இலை எடுத்த இறைவன் கண்ணனும் குதிரையும் கண்ணன் உதவாதது ஏன்? தருமனின் ஆணவம் அர்ச்சுனன் அகந்தை எலும்பு சொன்ன இறைமந்திரம் துரோணரின் மகள் சகுனியின் சகோதரர்கள் பாஞ்சாலி ஏன் சிரித்தாள் கர்ணனின் இடக்கைத் தானம் காய்ந்த விறகு ஈந்த ஈரநெஞ்சன் உயர்ந்த வேள்வி துரோணரும் ஆடுகளும் சகாதேவனின் தருமநீதி கண்ணனின் உண்மை வடிவம் அர்ச்சுனன் அம்புக்கு அஞ்சிய தேவர்கள் மலை போல் குவிந்த மலர்கள் தந்தையின் தவம் பழத்தோலில் சுவை கண்ட பரந்தாமன் கண்ணனின் மானம் காத்த பாஞ்சாலியின் பட்டுச்சேலை குடிசையை எரித்த நெருப்பைக் கும்பிட்டு நின்ற பக்தர் கணிகைப் பெண்ணின் பக்தி புலையன் வீட்டில் புனிதம் கண்ட இறைவன் கண்ணனைத் தாக்கிய அம்பு கண்ணனைக் காட்டிக் கொடுத்த மணிகள் வித்தையால் அழிந்த சீமாலிகன் மலர்களால் பெண்களை மறைத்த கண்ணன் கண்ணன் ஆடிய கூத்துகள் தமிழ்ப்பெண் நப்பின்னை தேவகியின் ஏக்கம் பாமாவின் பக்தி வீமனும் விரதமும்