Get it on Google Play
Download on the App Store

காய்ந்த விறகு ஈந்த ஈரநெஞ்சன்

 


16. காய்ந்த விறகு ஈந்த ஈர நெஞ்சன்

ஒரு நாள் ஒர் இரவலன் கர்ணனிடம் வந்து  “ஐயா! ஒருவார்மாக மழை பெய்து கொண்டே உள்ளது. வீட்டில் அரிசியிருந்தும் பொங்குவதற்கு விறகு இல்லாமையால் பட்டினி கிடக்கின்றோம். காய்ந்த விறகு சிறிது கொடுத்தால் உதவியாக இருக்கும்” என்று வேண்டினான்.
கர்ணன் அங்க நாட்டு அரசன். அரசன் அரண்மனையில் விறகு இருக்குமா? ஆயினும்  “இல்லை” என்ற சொல்லை அறியாத கர்ணன், அந்த இரவலனுக்கு எப்படி உதவலாம் என்ற சிந்தனையில் ஆழ்ந்தான்.
அருகிலிருந்த நண்பர் ஒருவர்  “கர்ணன், இந்த இரவலனுக்கு இல்லை என்று சொல்வதைத் தவிர வேறு வழிஇல்லை. இல்லை என்று சொல்லத்தான் போகின்றான்” என்று எண்ணிக் கொண்டிருந்தார்.
ஆனால், கர்ணன் அந்த நண்பரின் நினைவைப் பொய்யாக்கிவிட்டான்.
அரண்மனைத் தாழ்வாரத்தில் போட்டிருந்த கை மரங்களில் சிலவற்றைப் பிரித்தெடுத்தான். நன்கு காய்ந்திருந்த அவற்றை அந்த இரவலனுக்குக் கொடுத்தனுப்பினான்.
அதைக் கண்ட நண்பர், வள்ளல் தன்மைக்கு ஒருவன் என்று உலகம் கர்ணணைப் பாராட்டுவது சரிதான் என்று எண்ணி விடை பெற்றார். 

 

ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்

புலவர் த. கோவேந்தன்
Chapters
பதிப்புரை ஐவரை மணந்தவள் ஐவரை மணந்தவள் கண்ணனின் மனத்தூய்மை கடமையா வாய்மையா பெருஞ்சோறு வீமன் எழுதிய சமையல் நூல் எச்சில் இலை எடுத்த இறைவன் கண்ணனும் குதிரையும் கண்ணன் உதவாதது ஏன்? தருமனின் ஆணவம் அர்ச்சுனன் அகந்தை எலும்பு சொன்ன இறைமந்திரம் துரோணரின் மகள் சகுனியின் சகோதரர்கள் பாஞ்சாலி ஏன் சிரித்தாள் கர்ணனின் இடக்கைத் தானம் காய்ந்த விறகு ஈந்த ஈரநெஞ்சன் உயர்ந்த வேள்வி துரோணரும் ஆடுகளும் சகாதேவனின் தருமநீதி கண்ணனின் உண்மை வடிவம் அர்ச்சுனன் அம்புக்கு அஞ்சிய தேவர்கள் மலை போல் குவிந்த மலர்கள் தந்தையின் தவம் பழத்தோலில் சுவை கண்ட பரந்தாமன் கண்ணனின் மானம் காத்த பாஞ்சாலியின் பட்டுச்சேலை குடிசையை எரித்த நெருப்பைக் கும்பிட்டு நின்ற பக்தர் கணிகைப் பெண்ணின் பக்தி புலையன் வீட்டில் புனிதம் கண்ட இறைவன் கண்ணனைத் தாக்கிய அம்பு கண்ணனைக் காட்டிக் கொடுத்த மணிகள் வித்தையால் அழிந்த சீமாலிகன் மலர்களால் பெண்களை மறைத்த கண்ணன் கண்ணன் ஆடிய கூத்துகள் தமிழ்ப்பெண் நப்பின்னை தேவகியின் ஏக்கம் பாமாவின் பக்தி வீமனும் விரதமும்