Get it on Google Play
Download on the App Store

6. பட்டீச்சுரத்தில்

 

 

←← 5. திருவாவடுதுறைக் காட்சி

தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்  ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்6. பட்டீச்சுரத்தில்

7. திருவாவடுதுறைக் குருபூஜை →→

 

 

 

 

 


439992தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் — 6. பட்டீச்சுரத்தில்கி. வா. ஜகந்நாதன்

 

 


பட்டீச்சுரத்தில்


திருவாவடுதுறையிலிருந்து பட்டீச்சுரம் போகும் வழியில் கும்ப கோணத்தில் தமிழ் ஆசிரியராக இருந்த தியாகராச செட்டியாரை ஆசிரியர் சந்தித்தார். செட்டியாரைப்பற்றிய பெருமைகளை எல்லாம் ஆசிரியர் கேட்டிருந்தார். அவர் நல்ல சிவப்பு, பளபளவென்று இருக்கும் தேகமும், அவரது வீர நடையும், கம்பீரமான பார்வையும், தைரியமான பேச்சும் இவருடைய உள்ளத்தில் பதிந்தன. செட்டியார் இவரைப் பார்த்து, "நீ என்ன என்ன நூல்களைப் பாடம் கேட்டாய்?" என்று கேட்டார், தாம் பாடம் கேட்ட நூல்களைப் பற்றி இவர் சொன்னார். “நீர் மற்றவர்களுக்குப் பாடம் சொல்லமுடிமா?" என்று கேட்டார் செட்டியார். "அப்படியே செய்வேன்"
என்று இவர் சொன்னார். பிறகு பிள்ளையைப் பற்றிய பேச்சு அவர்களிடையே நிகழ்ந்தது. "ஐயாவிடம் பாடம் நன்றாகப் படியும், சோம்பேறியாக இருக்கக்கூடாது" என்று ஆசிரியரிடம் செட்டியார் சொன்னார். பிறகு ஆசிரியர் பிள்ளையுடன் பட்டீச்சுரம் சென்றார். பட்டீச்சுரத்தில் இருந்தபோது இவர் அதன் அருகில் இருந்த பல க்ஷேத்திரங்களைத் தரிசனம் செய்துகொண்டார். நாகைப் புராணம், மாயூரப் புராணம் முதலிய நூல்களைப் பாடம் கேட்டார்.
ஆறுமுகத்தா பிள்ளை வீட்டில் எங்கும் இல்லாத புதிய முறைகள் இருந்தன. இரவு ஒன்பது மணிக்குமேல் எல்லோரும் சாப்பிடாமலே படுத்துக்கொள்வார்கள். நள்ளிரவில் ஆறுமுகத்தா பிள்ளை எழுந்திருந்து எல்லோரையும் எழுப்பி உணவு அருந்தச் செய்வார். அந்த விசித்திரமான செயல் பலருக்குப் பிடிக்காவிட்டாலும் ஆறுமுகத்தா பிள்ளையின் வற்புறுத்தலினால் அந்த முறை தவறாமல் நடந்து வந்தது. ஆறுமுகத்தா பிள்ளை சற்றுக் கடினமான இயல்பு உடையவர். மீனாட்சிசுந்தரம் பிள்ளையைத் தவிர மற்றவர்களிடம் அவர் மரியாதை காட்டமாட்டார். இவரையும் சில சமயம் கடிந்து கொண்டார். சவேரிநாத பிள்ளை என்பவர் அடிக்கடி மாயூரத்திலிருந்து அங்கே வந்து செல்வார். இரவு 12 மணிக்குமேல் உணவு செய்துவந்த வழக்கத்தை அவர் தைரியமாகப் பேசி மாற்றினார். அவர், "பட்டீச்சுரத்தில் இரவில் நெடுநேரம் பசியோடு வருந்தும்படி செய்த பிரமதேவன் எங்களை மரமாகப் படைக்கவில்லையே!" என்று ஒரு பாட்டுப் பாடி அதைச் சொன்னார். ஆறுமுகத்தா பிள்ளை அதைக் கேட்டார். சவேரிநாத பிள்ளை பக்குவமாக எடுத்துச் சொன்னதன் விளைவாக இரவு 10 மணிக்குள் யாவரும் உணவு அருந்தும்படி செய்தார். அவர் செய்த காரியத்தை யாவரும் மெச்சினார்கள். பிள்ளை ஆறு மாதங்கள் பட்டீச்சுரத்தில்  தங்கியிருந்தார். அப்போது பல பெரிய மனிதர்களை எல்லாம் கண்டு பழகும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.
சரஸ்வதி பூஜைக்குத் தம்முடைய ஊராகிய உத்தமதானபுரம் செல்ல வேண்டுமென்று சொல்லி அப்படியே இவர் சென்றார். விஜய தசமியன்று தம்முடைய ஆசிரியரை விட்டிருப்பது நியாயமன்று என்றும், அன்று ஏதாவது பாடம் கேட்க வேண்டுமென்றும் ஆசிரியர் நினைத்தார். அவ்வாறு விஜயதசமியன்று பட்டீச்சுரம் சென்று நைடதத்தைப் பாடம் கேட்டார். மாயூரத்தில் முதல்நாள் பெற்றுக்கொண்டது நைடத நூல். இப்போதும் அதைப் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்கும் வாய்ப்புக் கிடைத்ததற்குத் தம் உவகையை ஆசிரியர் வெளியிட்டார்.
அதன் பின்பு தம்முடைய தாய் தந்தையர் இருந்த கோட்டூர் என்ற ஊருக்கு ஆசிரியர் சென்றார். அப்போது வெப்பு நோய் இவருக்குக் கண்டது. சிலகாலம் கழித்து அந்த நோய் நீங்கினவுடன் மீண்டும் திருவாவடுதுறை சென்று தம் ஆசிரியரைக் காணவேண்டு மென்ற அவாமீதூர்ந்தது.
 

 

 


 

தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்

Tamil Editor
Chapters
1. தமிழ்த் தாத்தா 2. இளமைக் கல்வி 3. மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் கற்றல் 4. பெயர் மாற்றம் 5. திருவாவடுதுறைக் காட்சி 6. பட்டீச்சுரத்தில் 7. திருவாவடுதுறைக் குருபூஜை 8. பிள்ளையவர்களின் அன்பு 9. வேலையை மறுத்தல் 10. புராணப் பிரசங்கம் 11. பிள்ளையவர்கள் மறைவு 12. புதிய வீடு 13. முதலில் பதிப்பித்த நூல் 14. கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியர் ஆனது 15. சீவக சிந்தாமணிப் பதிப்பு 16. சுப்பிரமணிய தேசிகர் மறைவு 17. பத்துப்பாட்டுப் பதிப்பு 18. சிலப்பதிகார வெளியீடு 19. புறநானூறு வெளியீடு 20. மணிமேகலையை வெளியிட்டது 21. கிராமதானத்தை மறுத்தது 22. ஹாவ்லக் பிரபு விஜயம் 23. சென்னைக்குப் போவதை மறுத்தது 24. பாராட்டுத் தாள் 25. ஐங்குறுநூறு வெளிவரல் 26. சென்னையை அடைதல் 27. போலீஸ் அதிகாரியின் மனமாற்றம் 28. தியாகராச வீலை 29. மகாமகோபாத்தியாயப் பட்டம் 30. தோடாப் பெறுதல் 31. பாரதியார் பாடல் 32. வீட்டை விலைக்கு வாங்கியது 33. பழைய திருவிளையாடல் 34. பிற நூல்களின் வெளியீடு 35. வ. உ. சிதம்பரம் பிள்ளையின் கடிதம் 36. அச்சகம் வாங்க விரும்பாமை 37. கார்மைகேல் சந்திப்பு 38. திருக்காளத்திப் புராணம் 39. பரிபாடல் வெளியீடு 40. வேலையிலிருந்து ஓய்வு பெறுதல் 41. தாகூர் தரிசனம் 42. திருவாவடுதுறை வாசம் 43. பெருங்கதைப் பதிப்பு 44. மீனாட்சி தமிழ்க் கல்லூரியில் முதல்வராதல் 45. தாக்ஷிணாத்ய கலாநிதிப் பட்டம் 46. சென்னை வருகை 47. நான் ஆசிரியரை அடைந்தது 48. பல்கலைக் கழகத்தில் பேச்சு 49. நான் மாணவனாகச் சேர்ந்தது 50. வேறு நூற்பதிப்புகள் 51. தமிழ்விடு தூதும் பிற நூல்களும் 52. தக்கயாகப் பரணி 53. பிள்ளையவர்கள் சரித்திரம் 54. டாக்டர் பட்டம் 55. கலைமகளை அணி செய்தல் 56. சதாபிஷேகம் 57. ராஜாஜியின் பாராட்டு 58. காந்தியடிகளைக் கண்டது 59. குறுந்தொகைப் பதிப்பு 60. குமரகுருபரர் பிரபந்தங்கள் 61. காசிமடத்தின் தலைவருடைய அன்பு 62. என் சரித்திரம் 63. எலும்பு முறிவு 64. வாழ்க்கை நிறைவு 65. உரைநடை 66. புத்தக விவரம்