Get it on Google Play
Download on the App Store

51. தமிழ்விடு தூதும் பிற நூல்களும்

 

 

←← 50. வேறு நூற்பதிப்புகள்

தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்  ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்51. தமிழ்விடு தூதும் பிற நூல்களும்

52. தக்கயாகப் பரணி →→

 

 

 

 

 


440038தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் — 51. தமிழ்விடு தூதும் பிற நூல்களும்கி. வா. ஜகந்நாதன்

 

 


தமிழ்விடு தூதும் பிற நூல்களும்


தமிழ்விடு தூது என்னும் நூலை ஆசிரியர் ஆராய்ந்து வந்தார். தமிழின் பெருமையை மிகச் சிறப்பாகச் சொல்கிற நூல் அது. அதை வெளியிடவேண்டுமென்ற எண்ணம் ஆசிரியருக்கு இருந்தது. அதில் பல திருவிளக்குகளைப் பற்றிய செய்திகள் வருகின்றன. அவற்றைப்பற்றியெல்லாம் மாயூரநாதர் கும்பாபிஷேகத்திற்குச் சென்றிருந்தபோது அங்கு வந்திருந்த சிவசாரியார்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார். அந்தத் தமிழ்விடு தூதில் இருந்த ஒரு கண்ணி ஆசிரியப் பெருமான் உள்ளத்தை மிகவும் கவர்ந்தது.

 

'இருந்தமிழே உன்னால் இருந்தேன்; இமையோர்
விருந்தமிழ்த மென்றாலும் வேண்டேன்'

 

என்ற கண்ணிதான் அது.
திருத்தணிகைப் புராணம், கந்தபுராணம் ஆகியவற்றை இயற்றிய கச்சியப்ப முனிவர் மிகப் பெரும் புலவர். சிவஞான முனிவருடைய மாணாக்கர், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு அந்த முனிவரிடம் மிகவும் பக்தி. 'இறைவன் என் முன்னால் தோன்றி என்ன வேண்டுமென்று கேட்டால், கச்சியப்ப முனிவரை ஒரே ஒருமுறை தரிசனம் பண்ணவேண்டுமென்று கேட்பேன்' என்று அந்தப் புலவர் பெருமான் சொல்வாராம். அந்த முனிவர் இயற்றிய கச்சி ஆனந்த ருத்திரேசர். வண்டு விடு தூது என்னும் நூலை விரிவான வகையில் வெளியிட வேண்டுமென்று ஆசிரியர் ஆராய்ச்சி செய்து வந்தார். 

 

 


 

தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்

Tamil Editor
Chapters
1. தமிழ்த் தாத்தா 2. இளமைக் கல்வி 3. மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் கற்றல் 4. பெயர் மாற்றம் 5. திருவாவடுதுறைக் காட்சி 6. பட்டீச்சுரத்தில் 7. திருவாவடுதுறைக் குருபூஜை 8. பிள்ளையவர்களின் அன்பு 9. வேலையை மறுத்தல் 10. புராணப் பிரசங்கம் 11. பிள்ளையவர்கள் மறைவு 12. புதிய வீடு 13. முதலில் பதிப்பித்த நூல் 14. கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியர் ஆனது 15. சீவக சிந்தாமணிப் பதிப்பு 16. சுப்பிரமணிய தேசிகர் மறைவு 17. பத்துப்பாட்டுப் பதிப்பு 18. சிலப்பதிகார வெளியீடு 19. புறநானூறு வெளியீடு 20. மணிமேகலையை வெளியிட்டது 21. கிராமதானத்தை மறுத்தது 22. ஹாவ்லக் பிரபு விஜயம் 23. சென்னைக்குப் போவதை மறுத்தது 24. பாராட்டுத் தாள் 25. ஐங்குறுநூறு வெளிவரல் 26. சென்னையை அடைதல் 27. போலீஸ் அதிகாரியின் மனமாற்றம் 28. தியாகராச வீலை 29. மகாமகோபாத்தியாயப் பட்டம் 30. தோடாப் பெறுதல் 31. பாரதியார் பாடல் 32. வீட்டை விலைக்கு வாங்கியது 33. பழைய திருவிளையாடல் 34. பிற நூல்களின் வெளியீடு 35. வ. உ. சிதம்பரம் பிள்ளையின் கடிதம் 36. அச்சகம் வாங்க விரும்பாமை 37. கார்மைகேல் சந்திப்பு 38. திருக்காளத்திப் புராணம் 39. பரிபாடல் வெளியீடு 40. வேலையிலிருந்து ஓய்வு பெறுதல் 41. தாகூர் தரிசனம் 42. திருவாவடுதுறை வாசம் 43. பெருங்கதைப் பதிப்பு 44. மீனாட்சி தமிழ்க் கல்லூரியில் முதல்வராதல் 45. தாக்ஷிணாத்ய கலாநிதிப் பட்டம் 46. சென்னை வருகை 47. நான் ஆசிரியரை அடைந்தது 48. பல்கலைக் கழகத்தில் பேச்சு 49. நான் மாணவனாகச் சேர்ந்தது 50. வேறு நூற்பதிப்புகள் 51. தமிழ்விடு தூதும் பிற நூல்களும் 52. தக்கயாகப் பரணி 53. பிள்ளையவர்கள் சரித்திரம் 54. டாக்டர் பட்டம் 55. கலைமகளை அணி செய்தல் 56. சதாபிஷேகம் 57. ராஜாஜியின் பாராட்டு 58. காந்தியடிகளைக் கண்டது 59. குறுந்தொகைப் பதிப்பு 60. குமரகுருபரர் பிரபந்தங்கள் 61. காசிமடத்தின் தலைவருடைய அன்பு 62. என் சரித்திரம் 63. எலும்பு முறிவு 64. வாழ்க்கை நிறைவு 65. உரைநடை 66. புத்தக விவரம்