Get it on Google Play
Download on the App Store

61. காசிமடத்தின் தலைவருடைய அன்பு

 

 

←← 60. குமரகுருபரர் பிரபந்தங்கள்

தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்  ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்61. காசிமடத்தின் தலைவருடைய அன்பு

62. என் சரித்திரம் →→

 

 

 

 

 


440048தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் — 61. காசிமடத்தின் தலைவருடைய அன்புகி. வா. ஜகந்நாதன்

 

 


காசிமடத்தின் தலைவருடைய அன்பு


ஒரு நாள் மாலை 7 மணி இருக்கும். ஆசிரியப் பெருமான் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். நானும் வேறு சில மாணவர்களும் பக்கத்தில் அமர்ந்திருந்தோம். கொல்லைப் புறக் கதவின் தாழ்ப்பாள் ஒசைப்பட்டது. யார் உள்ளே வருகிறார்கள் என்பது முதலில் தெரியவில்லை. திருப்பனந்தாள் மடத்தின் தலைவர் மெள்ள உள்ளே நுழைந்து வந்தார்.
"யார் வருகிறார்கள்?' என்று ஆசிரியப் பெருமான் கேட்டார். 'சுவாமிகள் வருகிறார்கள்' என்று சொன்னோம். அப்படியா!' என்று இவர் எழுந்தார். சுவாமிகளிடம், 'சொல்லி அனுப்பியிருந்தால் நானே தங்களிடம் வந்திருப்பேனே. எதற்காகத் தாங்கள் இப்படிப் பின்வழியாக வரவேண்டும்?' என்று கேட்டார்.
“தாங்கள் செய்திருக்கும் உபகாரத்திற்கு இது ஒரு பொருட்டா? தாங்கள் சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்களையும், குமரகுருபரர் பிரபந்தத் திரட்டையும் பதிப்பித்ததன் மூலம் நான் பிறந்த குலத்தையும் உயர்த்திவிட்டீர்கள். நான் புகுந்த மடாலயத்தின் சிறப்பையும் உயர்த்திவிட்டீர்கள். இதற்கு நான் என்ன கைம்மாறு செய்தாலும் ஈடாகாது' என்று சொல்லி ஆயிரம் ரூபாயை ஒரு வெள்ளித் தாம்பாளத்தில் வைத்து வழங்கினர். ஆசிரியப் பெருமானுக்கு அளவிறந்த வியப்பு உண்டாயிற்று. உள்ளத்தை நெகிழச் செய்த இந்த நிகழ்ச்சியை இவர் பலரிடம் அடிக்கடி சொல்லி உருகியது உண்டு.
 

 

 


 

தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்

Tamil Editor
Chapters
1. தமிழ்த் தாத்தா 2. இளமைக் கல்வி 3. மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் கற்றல் 4. பெயர் மாற்றம் 5. திருவாவடுதுறைக் காட்சி 6. பட்டீச்சுரத்தில் 7. திருவாவடுதுறைக் குருபூஜை 8. பிள்ளையவர்களின் அன்பு 9. வேலையை மறுத்தல் 10. புராணப் பிரசங்கம் 11. பிள்ளையவர்கள் மறைவு 12. புதிய வீடு 13. முதலில் பதிப்பித்த நூல் 14. கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியர் ஆனது 15. சீவக சிந்தாமணிப் பதிப்பு 16. சுப்பிரமணிய தேசிகர் மறைவு 17. பத்துப்பாட்டுப் பதிப்பு 18. சிலப்பதிகார வெளியீடு 19. புறநானூறு வெளியீடு 20. மணிமேகலையை வெளியிட்டது 21. கிராமதானத்தை மறுத்தது 22. ஹாவ்லக் பிரபு விஜயம் 23. சென்னைக்குப் போவதை மறுத்தது 24. பாராட்டுத் தாள் 25. ஐங்குறுநூறு வெளிவரல் 26. சென்னையை அடைதல் 27. போலீஸ் அதிகாரியின் மனமாற்றம் 28. தியாகராச வீலை 29. மகாமகோபாத்தியாயப் பட்டம் 30. தோடாப் பெறுதல் 31. பாரதியார் பாடல் 32. வீட்டை விலைக்கு வாங்கியது 33. பழைய திருவிளையாடல் 34. பிற நூல்களின் வெளியீடு 35. வ. உ. சிதம்பரம் பிள்ளையின் கடிதம் 36. அச்சகம் வாங்க விரும்பாமை 37. கார்மைகேல் சந்திப்பு 38. திருக்காளத்திப் புராணம் 39. பரிபாடல் வெளியீடு 40. வேலையிலிருந்து ஓய்வு பெறுதல் 41. தாகூர் தரிசனம் 42. திருவாவடுதுறை வாசம் 43. பெருங்கதைப் பதிப்பு 44. மீனாட்சி தமிழ்க் கல்லூரியில் முதல்வராதல் 45. தாக்ஷிணாத்ய கலாநிதிப் பட்டம் 46. சென்னை வருகை 47. நான் ஆசிரியரை அடைந்தது 48. பல்கலைக் கழகத்தில் பேச்சு 49. நான் மாணவனாகச் சேர்ந்தது 50. வேறு நூற்பதிப்புகள் 51. தமிழ்விடு தூதும் பிற நூல்களும் 52. தக்கயாகப் பரணி 53. பிள்ளையவர்கள் சரித்திரம் 54. டாக்டர் பட்டம் 55. கலைமகளை அணி செய்தல் 56. சதாபிஷேகம் 57. ராஜாஜியின் பாராட்டு 58. காந்தியடிகளைக் கண்டது 59. குறுந்தொகைப் பதிப்பு 60. குமரகுருபரர் பிரபந்தங்கள் 61. காசிமடத்தின் தலைவருடைய அன்பு 62. என் சரித்திரம் 63. எலும்பு முறிவு 64. வாழ்க்கை நிறைவு 65. உரைநடை 66. புத்தக விவரம்