Get it on Google Play
Download on the App Store

45. தாக்ஷிணாத்ய கலாநிதிப் பட்டம்

 

 

←← 44. மீனாட்சி தமிழ்க் கல்லூரியில் முதல்வராதல்

தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்  ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்45. தாக்ஷிணாத்ய கலாநிதிப் பட்டம்

46. சென்னை வருகை →→

 

 

 

 

 


440032தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் — 45. தாக்ஷிணாத்ய கலாநிதிப் பட்டம்கி. வா. ஜகந்நாதன்

 

 


தக்ஷிணாத்ய கலாநிதிப் பட்டம்


இவர் செய்து வரும் தமிழ்த் தொண்டுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டுமென்று 
மதுரையில் வக்கீலாக இருந்த டி. ஸி. சீனிவாசையங்கார் நினைத்தார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக அவர் அப்போது இருந்தார். அந்த விழாவில் ஆசிரியருக்கு ஒரு பொற்கிழி வழங்கினார்கள். அதே சமயத்தில் காஞ்சி காமகோடி சங்கராசாரிய சுவாமிகள் ஆசிரியருக்கு இரட்டைச் சால்வையும், தோடாவும் அனுப்பிக் கெளரவித்தார்கள்; தக்ஷிணாத்ய கலாநிதி' என்னும் பட்டத்தையும் அளிக்க ஏற்பாடு செய்தார்கள். ஆசிரியர் தாம் பதிப்பித்த நன்னூல் சங்கர நமச்சிவாயர் உரை நூலின் முகவுரையில் பொற்கிழி அளிக்க உதவிய அத்தனை பேர்களுடைய பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார்.
சிதம்பரத்தில் தமிழ்க் கல்லூரி முதல்வராக ஆசிரியர் இருந்த காலத்தில், கல்லூரியில் பாடம் சொன்ன நேரம் போக மற்ற நேரங்களில் நூலாராய்ச்சியிலேயே ஈடுபட்டார். தக்கயாகப் பரணியைப் பதிப்பிக்கவேண்டுமென்பது இவர் எண்ணம். நூலை விட அதன் உரையின் மதிப்பு அதிகமாக இருந்தது. அந்த உரையின் பதிப்பு வெளிவருவது மிகவும் பயனுடையதாக இருக்கும் என்று ஆசிரியர் அதனை ஆராய்ந்து வந்தார்.
 

 

 


 

தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்

Tamil Editor
Chapters
1. தமிழ்த் தாத்தா 2. இளமைக் கல்வி 3. மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் கற்றல் 4. பெயர் மாற்றம் 5. திருவாவடுதுறைக் காட்சி 6. பட்டீச்சுரத்தில் 7. திருவாவடுதுறைக் குருபூஜை 8. பிள்ளையவர்களின் அன்பு 9. வேலையை மறுத்தல் 10. புராணப் பிரசங்கம் 11. பிள்ளையவர்கள் மறைவு 12. புதிய வீடு 13. முதலில் பதிப்பித்த நூல் 14. கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியர் ஆனது 15. சீவக சிந்தாமணிப் பதிப்பு 16. சுப்பிரமணிய தேசிகர் மறைவு 17. பத்துப்பாட்டுப் பதிப்பு 18. சிலப்பதிகார வெளியீடு 19. புறநானூறு வெளியீடு 20. மணிமேகலையை வெளியிட்டது 21. கிராமதானத்தை மறுத்தது 22. ஹாவ்லக் பிரபு விஜயம் 23. சென்னைக்குப் போவதை மறுத்தது 24. பாராட்டுத் தாள் 25. ஐங்குறுநூறு வெளிவரல் 26. சென்னையை அடைதல் 27. போலீஸ் அதிகாரியின் மனமாற்றம் 28. தியாகராச வீலை 29. மகாமகோபாத்தியாயப் பட்டம் 30. தோடாப் பெறுதல் 31. பாரதியார் பாடல் 32. வீட்டை விலைக்கு வாங்கியது 33. பழைய திருவிளையாடல் 34. பிற நூல்களின் வெளியீடு 35. வ. உ. சிதம்பரம் பிள்ளையின் கடிதம் 36. அச்சகம் வாங்க விரும்பாமை 37. கார்மைகேல் சந்திப்பு 38. திருக்காளத்திப் புராணம் 39. பரிபாடல் வெளியீடு 40. வேலையிலிருந்து ஓய்வு பெறுதல் 41. தாகூர் தரிசனம் 42. திருவாவடுதுறை வாசம் 43. பெருங்கதைப் பதிப்பு 44. மீனாட்சி தமிழ்க் கல்லூரியில் முதல்வராதல் 45. தாக்ஷிணாத்ய கலாநிதிப் பட்டம் 46. சென்னை வருகை 47. நான் ஆசிரியரை அடைந்தது 48. பல்கலைக் கழகத்தில் பேச்சு 49. நான் மாணவனாகச் சேர்ந்தது 50. வேறு நூற்பதிப்புகள் 51. தமிழ்விடு தூதும் பிற நூல்களும் 52. தக்கயாகப் பரணி 53. பிள்ளையவர்கள் சரித்திரம் 54. டாக்டர் பட்டம் 55. கலைமகளை அணி செய்தல் 56. சதாபிஷேகம் 57. ராஜாஜியின் பாராட்டு 58. காந்தியடிகளைக் கண்டது 59. குறுந்தொகைப் பதிப்பு 60. குமரகுருபரர் பிரபந்தங்கள் 61. காசிமடத்தின் தலைவருடைய அன்பு 62. என் சரித்திரம் 63. எலும்பு முறிவு 64. வாழ்க்கை நிறைவு 65. உரைநடை 66. புத்தக விவரம்