Get it on Google Play
Download on the App Store

53. பிள்ளையவர்கள் சரித்திரம்

 

 

←← 52. தக்கயாகப் பரணி

தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்  ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்53. பிள்ளையவர்கள் சரித்திரம்

54. டாக்டர் பட்டம் →→

 

 

 

 

 


440040தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் — 53. பிள்ளையவர்கள் சரித்திரம்கி. வா. ஜகந்நாதன்

 

 


பிள்ளையவர்கள் சரித்திரம்


1930-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒருநாள் மாடியில் படுத்திருந்த ஆசிரியர் எழுந்திருந்து கீழே இறங்கி வந்தார். வரும் போது. கீழே இருந்த கதவு தடுக்கி விழுந்துவிட்டார். காலில் நன்றாக அடிபட்டு வீங்கிவிட்டது. அவரது வீட்டிற்கு அருகில் இருந்த டாக்டர் வந்து பார்த்தார். குணமாகவில்லை. பிறகு மிகச் சிறந்த டாக்டராகிய ரங்காசாரியாரை அழைத்து வந்தார்கள். அவர் ஆசிரியருக்கு வீட்டிலேயே ரண சிகிச்சை செய்தார். ஆசிரியர் சில நாட்கள் படுக்கையில் இருக்கும்படியாக நேர்ந்தது. அப்போது அவர் எதையும் படிக்கக்கூடாது என்று டாக்டர் சொல்லியிருந்தார். ஆனால் ஆசிரியப் பெருமானுக்கு தமிழ்ப் பாட்டுக் காதில் விழாவிட்டால் மூச்சே நின்றுவிடும். நான் அவர் அருகிலேயே அப்போது இருந்து வந்தேன். ஆசிரியப் பெருமானுடைய புத்திரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலையாக இருந்தார். அவர் ஹைகோர்ட்டிற்குப் போன பிறகு ஏதாவது புத்தகத்தை எடுத்து என்னைப் படிக்கச் சொல்வார் ஆசிரியர். இவருடைய சிந்தனை பிள்ளையவர்களுடைய வரலாற்றை முடித்துவிட வேண்டும் என்பதில் இருந்தது. பல விதமான குறிப்புகளைப் பல காலமாகச் சேர்த்திருந்தார். முன் பகுதிகளை எழுதிவிட்டார். கடைசிப் பகுதி எஞ்சியிருந்தது. படுத்த படுக்கையாய் இருந்த போது இவருக்குப் பிள்ளையவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தை முடிப்பதற்குள் தம் வாழ்க்கை முடிந்துவிடுமோ என்கிற அச்சம் இருந்தது.
ஒருநாள், அந்தக் கட்டை எடுத்துக்கொண்டு வா" என்று என்னிடம் சொன்னார். "டாக்டர் எதுவும் செய்யக்கூடாது என்று சொல்லியிருக்கிறாரே" என்றேன் நான். "டாக்டருக்கு என்ன தெரியும்? என் கடமையை நான் செய்தால் ஆண்டவன் என்னைக் காப்பாற்றுவான்" என்றார். அந்தக் கட்டை எடுத்து வந்தேன். மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் இறுதிக் காலத்தைப்பற்றிச் சொல்லத் தொடங்கிவிட்டார். கண்ணீர் விட்டுக்கொண்டே அந்தப் பகுதியை இவர் சொல்லச் சொல்ல நானும் கண்ணீர்விட்டுக் கொண்டே அந்தப் பகுதியை எழுதி வந்தேன். பிள்ளையின்  வரலாறு ஒருவாறு பூர்த்தியாயிற்று, பிறகு அது இரண்டு பாகங்களாக வெளிவந்தது. 
 

 

 


 

தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்

Tamil Editor
Chapters
1. தமிழ்த் தாத்தா 2. இளமைக் கல்வி 3. மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் கற்றல் 4. பெயர் மாற்றம் 5. திருவாவடுதுறைக் காட்சி 6. பட்டீச்சுரத்தில் 7. திருவாவடுதுறைக் குருபூஜை 8. பிள்ளையவர்களின் அன்பு 9. வேலையை மறுத்தல் 10. புராணப் பிரசங்கம் 11. பிள்ளையவர்கள் மறைவு 12. புதிய வீடு 13. முதலில் பதிப்பித்த நூல் 14. கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியர் ஆனது 15. சீவக சிந்தாமணிப் பதிப்பு 16. சுப்பிரமணிய தேசிகர் மறைவு 17. பத்துப்பாட்டுப் பதிப்பு 18. சிலப்பதிகார வெளியீடு 19. புறநானூறு வெளியீடு 20. மணிமேகலையை வெளியிட்டது 21. கிராமதானத்தை மறுத்தது 22. ஹாவ்லக் பிரபு விஜயம் 23. சென்னைக்குப் போவதை மறுத்தது 24. பாராட்டுத் தாள் 25. ஐங்குறுநூறு வெளிவரல் 26. சென்னையை அடைதல் 27. போலீஸ் அதிகாரியின் மனமாற்றம் 28. தியாகராச வீலை 29. மகாமகோபாத்தியாயப் பட்டம் 30. தோடாப் பெறுதல் 31. பாரதியார் பாடல் 32. வீட்டை விலைக்கு வாங்கியது 33. பழைய திருவிளையாடல் 34. பிற நூல்களின் வெளியீடு 35. வ. உ. சிதம்பரம் பிள்ளையின் கடிதம் 36. அச்சகம் வாங்க விரும்பாமை 37. கார்மைகேல் சந்திப்பு 38. திருக்காளத்திப் புராணம் 39. பரிபாடல் வெளியீடு 40. வேலையிலிருந்து ஓய்வு பெறுதல் 41. தாகூர் தரிசனம் 42. திருவாவடுதுறை வாசம் 43. பெருங்கதைப் பதிப்பு 44. மீனாட்சி தமிழ்க் கல்லூரியில் முதல்வராதல் 45. தாக்ஷிணாத்ய கலாநிதிப் பட்டம் 46. சென்னை வருகை 47. நான் ஆசிரியரை அடைந்தது 48. பல்கலைக் கழகத்தில் பேச்சு 49. நான் மாணவனாகச் சேர்ந்தது 50. வேறு நூற்பதிப்புகள் 51. தமிழ்விடு தூதும் பிற நூல்களும் 52. தக்கயாகப் பரணி 53. பிள்ளையவர்கள் சரித்திரம் 54. டாக்டர் பட்டம் 55. கலைமகளை அணி செய்தல் 56. சதாபிஷேகம் 57. ராஜாஜியின் பாராட்டு 58. காந்தியடிகளைக் கண்டது 59. குறுந்தொகைப் பதிப்பு 60. குமரகுருபரர் பிரபந்தங்கள் 61. காசிமடத்தின் தலைவருடைய அன்பு 62. என் சரித்திரம் 63. எலும்பு முறிவு 64. வாழ்க்கை நிறைவு 65. உரைநடை 66. புத்தக விவரம்