Get it on Google Play
Download on the App Store

36. அச்சகம் வாங்க விரும்பாமை

 

 

←← 35. வ. உ. சிதம்பரம் பிள்ளையின் கடிதம்

தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்  ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்36. அச்சகம் வாங்க விரும்பாமை

37. கார்மைகேல் சந்திப்பு →→

 

 

 

 

 


440023தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் — 36. அச்சகம் வாங்க விரும்பாமைகி. வா. ஜகந்நாதன்

 

 


அச்சகம் வாங்க விரும்பாமை


ஆசிரியர் புத்தகங்களை அச்சிடுவதற்குப் பல அச்சகங்களை நம்பித் தொல்லைப்பட்டு வருவதை அறிந்து திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர் அந்த வகையில் ஆசிரியருக்கு ஏதாவது உதவி புரியவேண்டுமென்று நினைத்தார். ஆசிரியப் பெருமானே சொந்தத்தில் ஓர் அச்சகத்தை வைத்துக் கொண்டால் நலமாக இருக்கும் என்று எண்ணினார்.
ஒருமுறை திருவாவடுதுறைக்கு ஆசிரியர் சென்றிருந்தார்: "பிற அச்சகங்களை நம்பிப் புத்தகங்களைக் கொடுத்துத் தொல்லைப் படுகிறீர்கள். நீங்களே ஓர் அச்சகத்தை வைத்துக்கொண்டால் புத்தகங்களை வெளியிடுவதற்கு உதவியாக இருக்கும். ஐயாயிரம் ரூபாயை நாம் உங்களுக்குத் தருகிறோம். அதை வைத்துக்கொண்டு அச்சகத்தை ஆரம்பித்தால் விரைவில் பல நூல்களை நீங்கள் வெளியிடலாம்" என்றார்.
ஆசிரியர் உடனே பதில் சொல்லவில்லை. "நாளைக்குப் பதில் சொல்கிறேன்" என்று வந்துவிட்டார். மறுநாள் சென்றபோது, "சந்நிதானத்திற்கு என்னிடம் இருக்கும் பேரன்பை நான் உணர்கிறேன். வெளி அச்சகத்தை நம்பி நூல்களை வெளியிடுவதில் பல தொல்லைகளுக்கு நான் ஆளாகிறேன் என்பது உண்மைதான். ஆனால் இப்போது புத்தகத்திற்கு வேண்டிய காகிதம், பைண்டுச் சாதனங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு மட்டும் கவலைப்பட வேண்டியிருக்கிறது. அச்சகத்தை வைத்து நடத்த ஆரம்பித்தால் ஆட்களை வைத்து, சம்பளம் கொடுத்து நிர்வாகம் செய்தாக வேண்டிய பெருந் தொல்லைகளும் சேர்ந்துகொள்ளும். நூல் ஆராய்ச்சிக்கு நேரம் கிடைக்குமா என்பது சந்தேகம். ஆகையால் சந்நிதானத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல்  இருப்பதற்கு மன்னிக்கவேண்டும்" என்று சொன்னார். அதன்மேல் ஆதீன கர்த்தர் அந்தக் கருத்தை வற்புறுத்தவில்லை.
ஆசிரியப் பெருமானுக்கு எட்டுத் தொகையில் ஒன்றாகிய அகநானூற்றைப் பதிப்பிக்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. அதை ஆராய்ந்து கொண்டிருந்தார். அப்போது வேறு சிலர் அதைப் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெரிந்தது. பின்னத்துர் நாராயணசாமி ஐயர் அதைப் பதிப்பிக்க முயன்றார், ஆனால் கடைசியில் ரா.இராகவையங்காருடைய உதவியினால் வேறு ஒருவர் அதைப் பதிப்பித்துவிட்டார். மற்றவர் பதிப்பித்த நூலைப் பதிப்பிப்பது ஆசிரியர் வழக்கமன்று. ஆதலால் அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டார்.
 

 

 


 

தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்

Tamil Editor
Chapters
1. தமிழ்த் தாத்தா 2. இளமைக் கல்வி 3. மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் கற்றல் 4. பெயர் மாற்றம் 5. திருவாவடுதுறைக் காட்சி 6. பட்டீச்சுரத்தில் 7. திருவாவடுதுறைக் குருபூஜை 8. பிள்ளையவர்களின் அன்பு 9. வேலையை மறுத்தல் 10. புராணப் பிரசங்கம் 11. பிள்ளையவர்கள் மறைவு 12. புதிய வீடு 13. முதலில் பதிப்பித்த நூல் 14. கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியர் ஆனது 15. சீவக சிந்தாமணிப் பதிப்பு 16. சுப்பிரமணிய தேசிகர் மறைவு 17. பத்துப்பாட்டுப் பதிப்பு 18. சிலப்பதிகார வெளியீடு 19. புறநானூறு வெளியீடு 20. மணிமேகலையை வெளியிட்டது 21. கிராமதானத்தை மறுத்தது 22. ஹாவ்லக் பிரபு விஜயம் 23. சென்னைக்குப் போவதை மறுத்தது 24. பாராட்டுத் தாள் 25. ஐங்குறுநூறு வெளிவரல் 26. சென்னையை அடைதல் 27. போலீஸ் அதிகாரியின் மனமாற்றம் 28. தியாகராச வீலை 29. மகாமகோபாத்தியாயப் பட்டம் 30. தோடாப் பெறுதல் 31. பாரதியார் பாடல் 32. வீட்டை விலைக்கு வாங்கியது 33. பழைய திருவிளையாடல் 34. பிற நூல்களின் வெளியீடு 35. வ. உ. சிதம்பரம் பிள்ளையின் கடிதம் 36. அச்சகம் வாங்க விரும்பாமை 37. கார்மைகேல் சந்திப்பு 38. திருக்காளத்திப் புராணம் 39. பரிபாடல் வெளியீடு 40. வேலையிலிருந்து ஓய்வு பெறுதல் 41. தாகூர் தரிசனம் 42. திருவாவடுதுறை வாசம் 43. பெருங்கதைப் பதிப்பு 44. மீனாட்சி தமிழ்க் கல்லூரியில் முதல்வராதல் 45. தாக்ஷிணாத்ய கலாநிதிப் பட்டம் 46. சென்னை வருகை 47. நான் ஆசிரியரை அடைந்தது 48. பல்கலைக் கழகத்தில் பேச்சு 49. நான் மாணவனாகச் சேர்ந்தது 50. வேறு நூற்பதிப்புகள் 51. தமிழ்விடு தூதும் பிற நூல்களும் 52. தக்கயாகப் பரணி 53. பிள்ளையவர்கள் சரித்திரம் 54. டாக்டர் பட்டம் 55. கலைமகளை அணி செய்தல் 56. சதாபிஷேகம் 57. ராஜாஜியின் பாராட்டு 58. காந்தியடிகளைக் கண்டது 59. குறுந்தொகைப் பதிப்பு 60. குமரகுருபரர் பிரபந்தங்கள் 61. காசிமடத்தின் தலைவருடைய அன்பு 62. என் சரித்திரம் 63. எலும்பு முறிவு 64. வாழ்க்கை நிறைவு 65. உரைநடை 66. புத்தக விவரம்